பிலிப்பைன்ஸில் கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் பலி
வடக்கு பிலிப்பைன்ஸில்(Philippines) பிக் அப் ட்ரக் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நேற்று(10) நள்ளிரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பேருந்தில் பயணித்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பயணிகளில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் வீதி விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
