அவுஸ்திரேலியாவுக்குள் சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கோவிட் பரவலால் பாதிக்கப்பட்ட தெற்கு அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கூப்பன் வழங்கும் செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டம் விரைவில் ஆரம்பமாவதாக Premier Steven Marshall அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படும் tours & experiences போன்றவற்றில் பங்குபற்றுவதற்கான $50, $100 மற்றும் $200 கூப்பன்கள் ஈஸ்டர் மற்றும் ஏப்ரல் பள்ளி விடுமுறையின் பின்னர் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தவர்களுக்கான இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் மூன்றாவது கட்டம் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும் எனவும், இது குறித்த மேலதிக விபரங்களை https://southaustralia.com/voucher என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri