55 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த இளம் காதலன்
களனி பிரதேசத்தில் 55 வயது காதலியிடம் தங்கத்தை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் இந்தக் காதலன் பல வருடங்களாக தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸில் முறைப்பாடு
மேலும் காதலரிடம் திருமண யோசனை ஒன்று இருந்தமையால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காதலி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளனர்.
ஆனால் தங்கப் பொருட்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |