தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம்: வாங்குபவர்கள் அவதானம்
எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து வருவதுடன், ஒரு பவுண் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாயை விட குறைவடைந்துள்ளது.

தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானம்
மேலும், இவ்வாண்டில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து குறைவடையும் என குறித்த ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, தங்கத்தின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தங்கத்தின் விலைகள் எதிர்வரும் ஆண்டில் அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால் மக்கள் தங்கத்தில் தங்களது முதலீகளை மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan