உலக சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை பதிவுசெய்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை தங்க நிலவரம்
இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
