உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு - இலங்கையில் பதிவாகப்போகும் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக குறித்த அதிகாரசபையின் துணைப் பணிப்பாளர் இந்திக பண்டார கூறியுள்ளார்.
இலங்கையின் நிலவரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தற்போது 357,000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.
இருப்பினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

நேற்று (25.12.2025) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,479 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், கிறிஸ்துமஸுக்குப் பிறகு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam