இலங்கையில் தங்கம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் தங்கத்தை மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி தங்கத்தை இழக்க வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் போலி இரத்தினக்கற்களை காட்டி மக்களை ஏமாற்றி அதற்கு பதிலாக தங்கத்தை பரிமாறிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மூவர் அடங்கிய குழுவின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெட்டியகொட - நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக்கற்களை வழங்கி அதற்கு பதிலாக பெறுமதியான தங்கபொருட்களை பெற்றுக்கொண்டதாக காலி மற்றும் களுத்துறையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தெடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
