உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ள நிலையிலேயே இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

செட்டியார்தெரு தங்க விலை நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 179,500 ரூபாவாக காணப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam