தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 591,037 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் (20.10.2022) குறைந்திருந்த தங்கத்தின் விலையில் இன்று (21.10.2022) சிறிதளவு அதிகரிப்பு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,890 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 167,150 ரூபாவாக உள்ளது.

22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 19,150 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 153,200 ரூபாவாக உள்ளது.
21 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 18,280 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 21 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 146,250 ரூபாவாக உள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam