இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்! விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன் ஒன்றின் விலையானது 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது 2 இலட்சம் ரூபாவை கடந்திருந்ததுடன், தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு. இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகைக்காலம் அண்மிக்கும் நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமையானது பொது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக அமையும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதிவான அதிகூடிய தங்க விலை
You My Like This Video

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
