அளுத்கடை நீதிமன்ற களஞ்சியசாலையில் மாயமான தங்க நகைகள் - விசாரணைகள் தீவிரம்
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுண்களுக்கும் அதிகமான தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழக்குப் பொருட்களின் களஞ்சியசாலை சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தங்கப் பொருட்கள் கொழும்பில் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்கள் தொடர்பான வழக்குப் பொருட்களாக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.