யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, 24 கரட் தூய தங்கம் நேற்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
May you like this video

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
