“பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளோம்”
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், விவசாயத்துறையில் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள, பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) கலந்துரையாட உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் (Tissa Kuttiyarachchi) தகவல்படி, இந்தக்கலந்துரையாடல் அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் வகையில் இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக விவசாயிகள் பசளைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜனாதிபதியுடன் விவாதித்த பின்னர் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri