இலங்கையில் ஆடுகளுக்கும் காப்புறுதி! அரசாங்கத்தின் நடவடிக்கை
இலங்கையில் ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் குறித்த சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கை
இங்கு கால்நடை முகாமைத்துவத்தில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் 70,000 ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகளுக்கு காப்புறுதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு ஆடு ஒன்றின் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் என்றும், ஆடுகளுக்கு ஆண்டுக்கு 400 ரூபாய் காப்பீட்டுத் தொகையுடன் காப்பீடு செய்ய வாய்ப்பு வழங்கவும், ஆடுகள் திருடு போனாலோ, திடீரென இறந்தாலோ அதிகபட்ச இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆடுகளை இலவசமாக வழங்கும் ஏற்பாட்டிற்காக இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
