சாலைகளில் மக்கள் இறப்பதை மட்டுமே இலங்கையில் காணமுடிவில்லை - முடக்கலுக்கு செல்ல வலியுறுத்தல்
போர்ட் சிட்டி பொருளாதார ஆணைய யோசனை மீதான விவாதத்தை ஒத்திவைத்து, முழுமையான முடக்கலுக்கு செல்லுமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் நிறுத்தி கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்த நிதியைத் திருப்பி விட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அரசாங்கம் முடக்கலுக்கு சென்று கோவிட் பரவலைக் கட்டுப்டுத்த செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை பின்னர் மேற்கொள்ளலாம் என்று மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் நாட்டு மக்களை மோசமான தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தொற்றுநோய்கள் தொடர்பில் ஒரு வித்தியாசத்தைக் காணமுடிகிறது.
பொதுமக்கள் சாலைகளில் விழுந்து இறப்பதை மட்டுமே இலங்கையின் காண முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வோஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை மேற்கோள்காட்டி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஏற்படும் விளைவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாடு முழுவதும் முடக்கலை மேற்கொண்டு ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் வாரந்தோறும் 5,000 ரூபாய் வருமானத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி மற்றொரு நரேந்திர மோடியாக மாறி தவறுகளை செய்யக்கூடாது.
பிரதமர் மோடி ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டி, இந்திய - இலங்கை போட்டியை முன்னோக்கி செல்ல அனுமதித்தார், கும்பமேளா விழாவை அனுமதித்தார், பின்னர் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தினார்.
இந்த தவறுகள் தான் இந்தியாவில் இன்று தொற்றுநோயை அதிகரிக்க வழிவகுத்தன மனோ
கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 20 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
