இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் தாருங்கள்: நாடாளுமன்றில் ரணில் - செய்திகளின் தொகுப்பு
இன்னும் இரண்டு வாரங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்ற இரண்டு தரப்பையும் ஒரு வழிப்படுத்தமுடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும் கட்சி ஆதரவு வழங்குவதாகக் கூறியபோதும், ஆளும் கட்சி இன்னும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக பசில் ராஜபக்ச நேற்று காட்டிவிட்டார் என மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,