தேநீரின் விலையில் மாற்றம்..!
பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத்(Asela Sampath) கோரிக்கை விடுத்துள்ளார்.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட உள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய இவ்வாறு விலை குறைப்பு அறிவிக்கப்பட உள்ளது.
தேனீர் விலை அதிகரித்திருந்தது
அண்மைக் காலமாக பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை உயர்த்தப்பட்டதனால் மக்கள் தேனீர் அருந்துவதனை தவிர்த்து வந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது விலை குறைக்கப்பட உள்ளதாகவும் இதனால் பால் தேநீரின் விலை குறைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
