கொழும்பில் 17 வயது மாணவியை தவறான முறைக்குட்படுத்திய 5 இளைஞர்கள் கைது
ஹங்வெல்ல (Hanwella), எம்புல்கம பிரதேசத்தில் காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (22.06.2024) இடம்பெற்றுள்ளதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி நேற்றையதினம் தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஜந்து இளைஞர்கள், மாணவியை பலாத்காரமாக ஏற்றிச்சென்று பாழடைந்த கட்டிடம் ஒன்றினுள் வைத்து தவறான முறைக்குட்படுத்தியுள்ளனர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றம்
கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 21 முதல் 24 வயதுடைய இளைஞர்களே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
