பண்டாரகம சிறுமியின் மரணம்! தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் முயற்சிகள் (Video)
பண்டாரகம, அட்டுலுகமையில் மரணமான சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சிறுமியின் சடலம் தொடர்பில் பிரேத பாிசோதனை இன்று இடம்பெறுகிறது.
எனினும் புதிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்று பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுமி
நேற்று முன்தினம், வீட்டில் இருந்து கோழியிறைச்சி வாங்குவதற்காக வியாபாரத்தளத்துக்கு சென்ற இந்த 9 வயது சிறுமி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை அவரது உடலம் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
விசாரணை
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனையக உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 16 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
கீர்த்தி சுரேஷ், மிஸ்கின் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam