இத்தாலியிலிருந்து கொழும்பிற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதியில் சிக்கிய பொருள்
இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதி ஒன்றிலிருந்து 30 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 212 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் மேலதிக விசாரணை
மத்துகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
