நாட்டை முடக்குவதற்கு தயாராக இருங்கள்! அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது கோவிட் தொற்று தீவிரமாக பரவல் அடைவதை அடுத்து முழுமையாக, அல்லது பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் குறித்த கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது செய்திப்பார்வை விசேட தொகுப்பு,