உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் வெளிநாட்டுப் பெண் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜேர்மன் நாட்டு பெண், இலங்கையில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், உள்ளூர் சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சேவைகள் ஆற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தளை மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்த இவர், தனது அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண்ணின் பெயர் மற்றும் முழு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மேலும், மாத்தளை மக்களின் எதிர்பார்ப்பு, மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கிடையில், ஒரு வெளிநாட்டு பெண்ணின் பங்கேற்பு மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவர் முன்வைக்கும் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் மாத்தளையின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
முதலாம் இணைப்பு
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
கட்டுப்பணம்
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.
இதற்கமைய, வைப்புத்தொகையை செலுத்திய பிறகு, இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
