மூன்று பேர் சுட்டுக் கொலை ..! பலர் மீது கடுமையான தாக்குதல் - சந்தேக நபர் கொழும்பில் கைது..!
கடந்த 2023ஆம் ஆண்டு அவிசாவெல்லையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
மேற்கு தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுத தாக்குதல்
இந்நிலையில், விசாரணைகளில் இந்த சந்தேக நபர் கடந்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி, அவிசாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் அதே ஆண்டு மே 26ஆம் திகதி, அவிசாவெல்லையில் ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவத்திலும், 20.09.2023 அன்று அவிசாவெல்லையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களிலும் தொடர்புடையவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் கோனபால பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan