தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள் – அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்

Sri Lankan Tamils
By Kamal May 27, 2026 04:32 PM GMT
Report

 இலங்கையில் தமிழ் மக்கள் மீது  இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் மதெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தாரகி சிவராம் கொலை தொடங்கி தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் முடக்கப்பட்டமை வரையில் அனைத்தையுமே இனவழிப்பு நடவடிக்கைகளாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள் – அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் | Genocide Happened In Srilanka Says Fr Jeevantha

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக வடக்கில் இருந்து காலி முகத்திடலில் போராட்டம் நடத்த வந்த தமிழர்கள் கொடூரமாக அடித்து துரத்தப்பட்ட வரலாறு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

'அரகலய' போராட்டத்தின் முக்கிய முகமான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அண்மையில் ஆற்றிய உரை ஒன்றின் காரணமாகக் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து அவர் விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

மே 16 ஆம் திகதி தான் ஆற்றிய உரையின் மிகச்சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, தான் ஒட்டுமொத்த சிங்கள மக்களுக்கும் எதிராகப் பேசியது போன்ற ஒரு பிம்பத்தை ஒரு குழுவினர் உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உண்மையை எதிர்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான பதற்றத்தை உருவாக்குவதாகவும், இது தனது குரலை ஒடுக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.

தான் இனப்படுகொலை (Genocide) என்று குறிப்பிட்டது உணர்ச்சிவசப்பட்ட விடயம் அல்ல எனவும், அது பல சர்வதேச மற்றும் உள்ளூர் ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் விளக்கியுள்ளார்.

அவர் தனது கூற்றுக்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில்' சர்வதேச கல்வியியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

2015 பெப்ரவரி 10 ஆம் திகதி வட மாகாண சபை, 1948 முதல் தமிழ் மக்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான இனப்படுகொலை' நடைபெற்று வருவதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

2022 மே 16 அன்று வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நான்கு ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்கள் இன்றும் ஒரு இனப்படுகொலை போன்ற ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இனப்படுகொலை என்பது ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதும், அவர்களை உடல் மற்றும் உளரீதியாக ஒடுக்குவதும் ஆகும் என்று அவர் சர்வதேச சட்டங்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்.

இந்த ஒடுக்குமுறைகள் சிங்கள மக்களால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக 1948 முதல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைக்கச் சிங்கள தேசியவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டன என்று அவர் கூறியுள்ளார்.

1956 இல் காலி முகத்திடலில் அஹிம்சை முறையில் போராடிய தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, 1983 கறுப்பு ஜூலை, யாழ் நூலக எரிப்பு மற்றும் தர்மரத்னம் சிவராம் (தராக்கி) உள்ளிட்டோரின் படுகொலைகள் இந்த 'நிழல் அரசாங்கத்தின்' ஒரு பகுதியே என அவர் சாடியுள்ளார்.

கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தனது கருத்திலிருந்து விலகி நிற்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், தான் திருச்சபையின் உத்தியோகபூர்வ பேச்சாளராகப் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே ஒரு மதத் தலைவரின் கடமை. நான் ஒரு குடிமகனாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வலியுணர்ந்த ஒருவனாகவும் பேசுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மையான அமைதி ஏற்பட வேண்டுமானால், கடந்த காலத்தில் நடந்த கசப்பான உண்மைகளை ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் மாறுநிலை நீதிப்பொறிமுறைமை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்,.

தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' போன்ற ஒரு பொறிமுறை இலங்கைக்குத் தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், சிறைக்குச் செல்ல நேரிட்டாலும் உண்மைக்காகக் குரல் கொடுப்பதைத் தான் நிறுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

தம்மை கொலை செய்தாலும், இந்த உண்மைகளை மறைக்க முடியாது என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US