தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை: அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் பிரசாரம்

Tamils Sri Lanka United Kingdom
By Sivaa Mayuri May 12, 2023 06:59 AM GMT
Report

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தும் வகையில் சர்வதேச பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. 

குறத்த பிரசாரத்தை, இனப்படுகொலை தடுப்பு, வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஒட்டாவா தமிழ்ச் சங்கம் என்பனவும் இந்த பிரசாரத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல அமைப்புகள் இந்த பிரசாரத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamils, Sri Lanka Tamils, Genocide

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் 

இந்தநிலையில் 750க்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய மனுவின் முதற்கட்ட நகல் பிரதமருக்கு அனுப்பப்பட்டு இந்த கையெழுத்து இயக்கம் தொடரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையத்தின் இயக்குநர் அம்பிகை கே செல்வகுமாரின் கூற்றுப்படி, 'இந்த மனுவில் அதிக எண்ணிக்கையில் கையெழுத்திடுவது, இலங்கையில் அடுத்தடுத்து அரசாங்கங்கள் மேற்கொண்ட தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்க பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல், நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை அங்கீகரிப்பது சரியான திசையில் ஒரு முக்கியமான படியாகும். 

இந்த விடயத்தில் கனேடிய நாடாளுமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கனடாவின் நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு அனைத்து நாடுகளையும் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தைக் கேட்டுக்கொள்வதாகத் தமிழ் இனப்படுகொலை நினைவகம் கூறியுள்ளது.

போர்க்குற்றங்கள்

இந்தநிலையில் கையெழுத்துக்கான மனுவில் மேலும் பல தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன:-

இலங்கை அரசாங்கம் தனது படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் கட்டளையிடப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை (சர்வதேச நீதிமன்றம்) உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம், இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பயணத் தடை விதித்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கனடா பயணத்தடை விதித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை ஒருமனதாக அங்கீகரித்தது.

Tamils, Sri Lanka Tamils, Genocide

இனப்படுகொலைக் குற்றத்தில் இலங்கை

இதனைத் தவிர , 1. 2013, மார்ச் 27 அன்று, இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றம், தமிழர்கள் மீதான 'அடக்குமுறை' நிறுத்தப்படும் வரை மற்றும் 'இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு' காரணமானவர்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

2. 2013, டிசம்பர் 10 அன்று, ஜேர்மனியின் ப்ரெமனில், இலங்கை மீதான மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வின்போது, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றத்தில் இலங்கை குற்றவாளி என்று பதினொரு நீதிபதிகள் குழு ஏகமானதாகத் தீர்ப்பளித்தது.

3. 2015,பெப்ரவரி 10,அன்று, இலங்கையில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க ஐ.நா விசாரணை கோரிய தமிழ் இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியது.

4. 2018, மே 7 அன்று, கனடாவின் ஒட்டாவாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியம் மற்றும் இனப்படுகொலை பற்றிய 2ஆவது சர்வதேச தமிழ் மாநாட்டில், 21 உலகத் தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றின. 

British Parliament, United Kingdom

பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம்

'இனப்படுகொலை குற்றச்சாட்டில் சுதந்திரமான சர்வதேச விசாரணை மட்டுமே ஏற்கப்படும்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

5. 2021, மே 12, அன்று, ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார யோசனை 104 சட்டமாக்கப்பட்டது.

6. 2022,மே 18, அன்று, கனேடிய நாடாளுமன்றம் மே 18ஆம் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை ஒருமனதாக நிறைவேற்றியது.

7. 2022, நவம்பர் 9, அன்று, பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் முக்கிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US