இலங்கைக்கு எதிராக பிரித்தானியாவின் ஊடாக சர்வதேச நீதிமன்ற நடவடிக்கை (VIDEO)
இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் லண்டனில் பல ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோரின் சத்திய கடதாசிகளை உள்ளடக்கி பல மில்லியன் பவுன்ஸ் செலவில் சட்ட மேதையின் உதவியுடன் முக்கிய ஆவணமொன்று சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கைக்கு எதிராக பிரித்தானியாவின் ஊடாக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,