யாழில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மீட்பு நடவடிக்கையானது இன்றையதினம் (03.07.2023) முன்னெடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேலதிக நடவடிக்கை
இதேவேளை பொதி ஒன்றினிலிருந்து 20 ஜெலட்டின் குச்சிகளே மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மீட்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத செயற்பாடு
குறித்த ஜெலட்டின் குச்சிகளில் உள்ள வெடி மருந்துகளை பிரித்தெடுத்து மீன் பிடிக்கான டைனமேட் தயாரிக்க கடற்றொழிலாளர்கள் பயன்டுத்தியுள்ளனர்.
இதற்கமைய டைனமேட் பயன்படுத்தி கடற்றொழில் ஈடுபடுவது சட்டவிரோத செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |