க.பொ.த சாதாரணதர பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றைய தினம் (14.11.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் திணைக்கள கொடுப்பனவு
மேலும் கூறுகையில், பரீட்சைகள் திணைக்களத்தின் கொடுப்பனவுகள் தொடர்பிலான முழுமையான மீளாய்வுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமலிருந்த தகவல் தொழிநுட்பத்திற்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.