2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று(23) முதல் இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic/ ஆகிய இணையத்தளங்களிலிருந்து பெற்று உரிய முறையில் பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செயலியினூடாக விண்ணப்பம்
EXAMS SRI LANKA என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலியினூடாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் அதிபர்களிடம் , பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பெற்று குறித்த செயலியினூடாக சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் அல்லது கையடக்க தொலைபேசி செயலியூடாக விண்ணப்பித்ததன் பின்னர் அவற்றிலிருந்து நிழற்பட பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், கோரப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
