பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வர்த்தமானி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்லும் நடைமுறை தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் 24 மணிநேரமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனினும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் திகதியை குறிப்பிட்டுக் கூறமுடியாதுள்ளதாக சுகாதார பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்
எமது செய்திச்சேவைக்கு கருத்துரைத்த அவர் பெரும்பாலான நாடுகள் இந்த நடைமுறையை இன்னும் பின்பற்றவில்லை என்று கூறினார்
தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அட்டையை நீண்ட நாட்களுக்கு வெளியில் கொண்டு செல்லமுடியாது.
எனவே தொழில்நுட்ப ரீதியில் அட்டைகளை தயாரிப்பது உட்பட்ட பல்வேறு முறைகளில் இந்த தடுப்பூசி கட்டாய அட்டைகளை விநியோகிப்பது குறித்து ஆராயப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.