நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கு நிபந்தனை! வெளியானது வர்த்தமானி
இறக்குமதி பொருட்களுக்கு நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியீடு
நேற்றைய தினத்திற்கான திகதியிடப்பட்டு இது தொடர்பான வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இறக்குமதி பொருட்கள்
இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவை இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
