அதிரும் காசா களமுனை! 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
அரபு நாடுகளையும், சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஹமாஸை இலக்கு வைத்த இஸ்ரேலின் தாக்குதல் நகர்வானது காசா மக்களின் பலி எண்ணிக்கையை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
போரின் உக்கிரம்
இதனை அடுத்து மீண்டும் போரின் உக்கிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த 5 நாட்களில் மாத்திரம் காசாவில் 600க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், லெபனான் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam