காசா போர் நிறுத்தம்: இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்- செய்திகளின் தொகுப்பு
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கும்
குறைவான காலமே உள்ள நிலையிலேயே சர்வதேச மத்தியஸ்தர்கள் மற்றும் ஹமாஸ்
பிரதிநிதிகள் கெய்ரோவில் கூடியுள்ளனர்.
இதில் ஆறு வாரம் போர் நிறுத்தம் மற்றும் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் ரமழானுக்கு முன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இராஜதந்திர அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இஸ்ரேலிய பிரதிநிதிகள் விலகியுள்ளனர்.
உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட ஹமாஸ் மறுத்ததை அடுத்து இஸ்ரேல் இந்தப் பேச்சுவார்த்தைகளை புறக்கணித்திருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
