நிறைவுக்கு வந்த கௌதம புத்தரின் புனித தந்த தாது தரிசனம்!
கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற கௌதம புத்தரின் புனித தந்த தாது தரிசன நிகழ்வு இன்று மாலை 5.30 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவுற்றது.
கடந்த 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனித தந்த தாது தரிசன நிகழ்வானது இன்று வரையான ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் சுமார் ஐந்து லட்சத்தி ஐம்பதினாயிரம் யாத்திரிகர்கள் அளவிலானோர் புனித தந்த தாதுவை தரிசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரிசை
நிகழ்வின் கடைசி நாளான இன்றைய தினம் சுமார் 88 ஆயிரம் பேர் தந்த தாதுவை தரிசிக்கும் நோக்குடன் காலை தொடக்கம் வரிசைகளில் காத்திருந்தனர்.
இவர்களுக்கான வரிசை சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்துக்கும் அப்பால் நீண்டிருந்தது.
கடைசி நாளான இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமான தரிசன நிகழ்வு இன்று மாலை 5.30 மணியளவில் உத்தியோகபூர்மாக நிறைவுற்றது.
எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் தரிசன நிகழ்வை நீடிப்பதில்லை என்று அரசாங்கம் நேற்றே அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் இன்றைய தினம் மாலையுடன் புனித தந்த தாது தரிசன நிகழ்வு உத்தியோகபூர்வமாக நிறைவுற்றுள்ளது.

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
