இடைநிறுத்தப்பட்டுள்ள எரிவாயு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு (Photo)
நாளை முதல் மீண்டும் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று நிபந்தனைகளின் கீழ் குறித்த கொள்கலன்கள் விநியோகம் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த பல நாட்களாக எரிவாயுவுடன் தொடர்பான பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டில் பல தொழிற்துறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், உணவக உரிமையாளர்களும் கடும் சிக்கல் நிலையை எதிர்நோக்கியிருந்தனர்.
மேலும், சமைத்த உணவுகளை கடைகளில் இருந்து பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 1 மணி நேரம் முன்

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை! News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022