வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வள்ளுவர்புரத்தில் எரிவாயு அடுப்பினை பயன்படுத்தும் குடும்பம் ஒன்று வழமை போன்று சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.
எரிவாயு வழங்கும் முகவரிடமும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலைவரும் நிலையில் சமையல் எரிவாயு
அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan