மட்டக்களப்பு வீடு ஒன்றில் எரிவாயு தீப்பற்றல் : விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் நேற்று(31) இரவு 10.00 மணிக்கு தீப்பற்றியுள்ளது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் புத்திசாரியமாக ஈரமான சாக்கு போட்டு தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் மட்டு.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் சில நிமிடங்களில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி
குறித்த வீட்டில் சம்பவ தினமான நேற்று இரவு வீட்டின் உரிமையாளர் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதன்போது சிலிண்டரில் இருந்து வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீப்பற்றி கொண்டது.

இதனையடுத்து உடனடியாக புத்திசாதுரியமாக வீட்டின் உரிமையாளர் செயற்பட்டு ஈரமான சாக்கு போட்டு தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் எரிவாயு சிலிண்டரை சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி வீட்டின் வெளியில் கொண்டு சென்று வைத்தனர்.
அதிகளவான வெப்பம் ஏற்பட்டுள்ளதால்
இதேவேளை அயலவர்கள் மாநகரசபை தீயணைக்கும் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சில நிமிடங்களில் சென்றுள்ளனர்.

இதேவேளை தற்போது அதிகளவான வெப்பம் ஏற்பட்டுள்ளதால் வீடுகளில் மற்றும் கட்டிடங்களில் உள்ள மின்சார வயர்கள் அதிக வெப்பத்தால் உருகி மின் ஓழுக்கு ஏற்படுகின்ற வேளை தானாக இயங்கி மின்சாரத்தை துண்டிக்கும் றிப் சுவிட்சுகள் செயல்படாததால் தீ ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் வீடுகளில் உள்ள றிப் சுவிட்சுகள் செயற்படுகின்றதா பரிசோதனைகளை செய்யவும் என மாவட்ட மின்சார சபை பணிப்பாளர் பொறியலாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 21 மணி நேரம் முன்
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam