பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் - கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ கொமாண்டோ
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று புத்தளம் பாலவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
34 வயதான மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் என முன்னாள் இராணுவ கொமாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பல்வேறு பெயர்களில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் மறுப்பு
இதேவேளை குறித்த கொலையை மேற்கொள்ள ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவின் சடலத்தை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri