செவ்வந்தியுடன் சேர்ந்த காரணத்தை வெளியிட்ட நுகேகொட பாபா
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு தற்போது களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நுகேகொட பாபாவின் விசாரணையின் போது, சலிந்து மல்ஷிகா குணரத்ன என்கிற குடு சலிந்துவின் மிரட்டல் காரணமாக இந்தியா வழியாக டுபாய்க்கு தப்பிச்சென்றதாக அவர் கூறியுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் தந்தை மூலம் அவரை அடையாளம் கண்டதாகவும், பின்னர் பத்மேவின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் வலையமைப்பில் ஈடுபட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும், அவரை விசாரித்ததில், நுகேகொடையின் ஜம்புகஸ்முல்ல பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கையெறி குண்டு மற்றும் 10 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
மேலும், கந்தன-கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் உள்ள ஒரு தூணுக்கு அருகில் சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்புடைய வெடிமருந்துகள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளன, மேலும் கெஹல்பத்தர பத்மே அவற்றை அவருக்குக் கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும் கம்பஹாவைச் சேர்ந்த ஒஸ்மான் என்ற தொழிலதிபரை கொல்லும் திட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




