கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட குழப்ப நிலை
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கான முயற்சியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்று மதியம் துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்தபோது இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்களின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் காலி முகத்திடலில் சட்டவிரோத வர்த்தகர்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
எனினும் சிறிது காலமாக அந்தப் பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று மதியம் பொலிஸ் அதிகாரிகளுடன் அந்த இடத்திற்கு வந்தனர்.
இந்த இடத்தில் சிறிது காலமாக வர்த்தகம் செய்து வருவதாகவும், ஆனால் பொது சுகாதார ஆய்வாளர்களிடமிருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என கூறி அவர்களை இந்த இடத்திலிருந்து அகற்றத் தயாராகி வருவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எனினும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாளையதினம் வரை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்படுவதாக, துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
