மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பிலே இன்று பெருவாரியாக பேசப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் செய்த அநியாயங்கள் அட்டூழிங்களில் பாரிய குற்றம் ஒன்று நடைபெற்ற நாளே இன்றாகும்.
அதாவது மே மாதம் 09 திகதி இன்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்படவில்லை.
இது கபில சந்திரசேனவின் மரணத்தை விட கொடுமையானது. 2022 ஆம் ஆண்டு மக்கள் வீதியில் இறங்கி ராஜபக்சக்கள் அதிகாரத்தை விட்டு போக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகார போராசையில் பதவியை தக்க வைத்து கொள்ளவதற்காக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மகிந்தவின் குற்றக் கும்பல்கள் காலி முகத்திடல் அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் நடத்துவதற்கான காரணங்கள்
அரகலய போராட்டத்தின் முக்கிய நபர்களை கொலை செய்யவும் திட்டமிடப்பட்டது.அன்று அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு யார் துப்பாக்கி வழங்கியது. நாட்டில் பல இடங்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவற்றுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கெல்லாம் மூல காரணமான மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவில்லை.இன்றும் மகிந்த சுதந்திரமாக நடமாடுகிறார்.
2022 மே மாதம் 09 ஆம் திகதி அலரி மாளிகையில் சட்டவிரோத மாநாடு ஒன்றை மகிந்த நடத்தினார்.அதற்காக நாடு முழுவதிலிருந்தும் பேருந்துகளில் ஆட்களை கொண்டு வந்தனர். மாநாட்டில் வந்தவர்களுக்கு விருந்துபசாரம் மற்றும் மதுவும் பரிமாறப்பட்டது.

அச் சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் கோல்பேஸ் போராட்டத்திற்கு தாக்குதல் நடத்தி அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என கூச்சலிட்ட போதும் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மகிந்த மௌனமாக இருந்து அதை அரங்கேற்ற வழியமைத்தார்.
அதன் பின்னர் கூட்டம் முடிவடைந்து அலரி மாளிகையில் இருந்து வெளியேறியவர்கள் இரும்பு கம்பி மற்றும் பொல்லுகளுடனே வந்தனர்.இவற்றை யார் வழங்கியது.
அப்படி வந்தவர்கள் முதலில் ‘மயினா கோகம’வில் இருந்தவர்களுக்கு தாக்குதல் நடத்திய பின்னர் கோல் பேஸ் போராட்ட காரர்களுக்கு கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.
அன்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தனது உத்தரவு இல்லாமல் கலகம் அடக்கும் பொலிஸாரை வரவழைக்க வேண்டாம் என்று உத்தர போட்டிருந்தார்.அதன் பின்னர் நாடு முழுவதும் பாரிய சம்பவங்கள் நடைபெற்றன.
முனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இவ்வாறே அன்று மகிந்தவின் குற்ற கும்பலும் அடியாட்களும் தாக்குதல் நடத்தினர்.ஆனால் இந்த திட்டத்தின் பிரதான சூத்திரதாரியான மகிந்த ராஜபக்ச நீதியின் பிடியில் அகப்படவில்லை.சிலருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மகிந்தவுக்கு எதிராக முக்கிய சாட்சிகள் இருந்தும் அவரை கைது செய்யவில்லை. அரகலய போட்ட குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது.
அந்த முறைப்பாட்டில் ஒவ்வொரு காணொளியையும் காண்பித்து மகிந்தவின் செயற்பாட்டையும் அவர் இதை செய்ய தூண்டிய விதம் தொடர்பில் விபரித்தது.

அந்த குழுவின் முறைப்பாட்டுக்கான விசாரணை அறிக்கையை கூட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லை. இதுவரை நான்கு வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை.
இந்த கொடூர சம்பவத்தின் நினைவேந்தலும் கண்காட்சியும் இன்றும் நாளையும் (09-10) கொழும்பு 07-ஹோட்டன் பிலேஸில் அமைந்துள்ள ஜே.ஏ.டி பொரேரா கலையரங்கில் நடைபெறுகிறது.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan