போராட்ட செயற்பாட்டாளருக்கு அதிர்ச்சி - திடீரென கிடைத்த பல மில்லியன் ரூபாய்
தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென வந்த பெருந்தொகை பணம்

தனது சமூகவலைத்தள கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர்,
போராட்டத்திற்காக தனிப்பட்ட பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில திடீரென எனது கணக்கிற்கு எவ்வித அறிவிப்புமின்றி 50 லட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது. நான் இதனை எடுத்து செலவு செய்த பின்னர் போராட்டம் மூலம் நிதி மோசடி செய்ததாகவும், டயஸ்போரா வலையில் சிக்கி விடுவேன் எனவும் இதனை வைப்பிட்டவர் திட்டமிட்டிருப்பார்.
சட்ட நடடிக்கை எடுக்கும் ரெட்டா

நான் CIMA தகுதி பெற்ற கணக்காளர் ஒருவராகும். நான் பணத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடியவன் அல்ல என உங்களுக்கு தெரியும். இதுவரையில் போராட்டத்தில் தனிப்பட்ட இலாபம் எதுவும் பெறவில்லை.
எமது கைகள் 100 சதவீதம் சுத்தமாக இருந்தமையினாலேயே எம்மை அடக்குவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சேறு பூசும் பிரச்சாரங்கள் குறித்து அலட்சியமாக இருக்க முடிந்தது.
இன்று திடீரென எனது கணக்கில் விழுந்த 5 மில்லியன் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் சம்பத் வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன் என ரெட்டா குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri