சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் - கஜேந்திரகுமார் பகிரங்க எச்சரிக்கை
அடக்கு முறை ஒரு தரப்பிற்கு நடந்தால் அது பரவும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை சிங்கள பௌத்த மக்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்ற வரைக்கும் அவர்களுடைய அழிவும் நிச்சயம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவ மயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,