சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத் திட்டமே எமது எதிர்பார்ப்பு:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)
13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (08.02.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“13ஆம் திருத்தச்சட்டத்தை ஒரு பேச்சுப்பொருளாக கூட கருதவில்லை, இது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவதைக் கூட நாம் விரும்பவில்லை.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு
13ஆம் திருத்தச்சட்டத்தை சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதிர்ப்பதற்குக் காரணம் அது இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை மற்றும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை இல்லாது செய்வதற்குமே ஆகும்.
இந்த திருத்தச்சட்டம் மூலாமாக தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுடன் இது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றது.
எனவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத் திட்டத்தினையே நாம் எதிர்பார்க்கின்றோமே தவிர ஒற்றையாட்சி முறைக்குட்பட்ட தீர்வுகளை அல்ல.”என தெரிவித்துள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 மணி நேரம் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri
