இனவாதத்தை தூண்டும் செயல்: கஜேந்திரகுமார் வீடு முற்றுகைக்கு தமிழ் தரப்பு கண்டனம்
இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டும் வகையில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகக் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குருந்தூர்மலைக்கு வந்து குழப்பம் விளைவிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள், அவருக்கு எதிராக்கப் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
அந்தவகையில், கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவும் கடந்த இரண்டு தினங்களில் அடுத்தடுத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்த மோசமான நடவடிக்கைகளைக் கண்டித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
