பசில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் - ஜீ.எல்.பீரிஸ் பெருமிதம்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(G L peiris) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அபிவிருத்தி இணைப்பு குழுவின் பிரதித் தலைவருக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் தலைவருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.