க.பொ.த சாதாரண தர பரீட்சை: அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
நாட்டில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர 2022(2023) பரீட்சை தொடர்பாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எந்த காரணம் கொண்டும் அதிபர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப் பத்திரம் இல்லாமல், பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |