சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவு திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களைப் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இன்றைய தினம் (16.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரியி இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி இலக்கங்கள்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, விண்ணப்பித்தும் இதுவரை அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதார்கள் அது தொடர்பில், திணைக்களத்தில் வினவ முடியும்.
011 522 61 00 அல்லது 011 522 61 26 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இது குறித்த விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri