அதிகரித்து வரும் பொதுக் கடன் அளவுகள் குறித்து G - 24 உறுப்பினர்கள் கவலை
இலங்கை உட்பட, நாடுகளிடையே அதிகரித்து வரும் பொதுக் கடன் அளவுகள் குறித்து G -24 உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல வளரும் நாடுகள் தாங்க முடியாத கடன் சுமைக்கு உட்பட்டுள்ளதாக G -24 குழுவின் உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதிய மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வோசிங்டன் வசந்தகால கூட்டங்களின் போது குறிப்பிட்டுள்ளனர்.
கடன் நெருக்கடி
நிதிக்கான அணுகல் குறைதல், இறுக்கமான வெளிப்புற நிதி நிலைமைகள், அதிக கடன் அளவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே வளரும் நாடுகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு G -24 உறுப்பினர்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியம், குறுகிய கால நிதியளிப்பு கருவிகளை சீர்திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் G -24 குழுக்கூட்டத்தில் இலங்கையின் கடன் நெருக்கடி குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
