வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் இரண்டு பேருக்கு இன்று (14.03) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேர் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (14.03)வெளியாகிய நிலையில், 2 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 23 பேர் தற்போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 1800 பேர் பணியாற்றும் நிலையில் அவர்களுள் 800 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
