வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் இரண்டு பேருக்கு இன்று (14.03) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேர் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (14.03)வெளியாகிய நிலையில், 2 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 23 பேர் தற்போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 1800 பேர் பணியாற்றும் நிலையில் அவர்களுள் 800 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri